×

வாடிக்கையாளர்களிடம் நகைகளை பெற்று அதிக விலைக்கு விற்ற 3 பேர் கைது

தாம்பரம்: பெருங்குடி, அன்னை சத்தியா நகர் விரிவு, கலைஞர் நகர், 3வது தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (33). இவர், குரோம்பேட்டை சந்திரன் நகர் முதல் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வட்டார தலைவராக வேலை செய்து வருகிறார். இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்து, பணியில் இருந்து சென்ற, சேலம் மாவட்ட கள்ளிப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ், அதே ஊரை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 2 பேர், எங்களது நிறுவனத்தில் நகை விற்க வரும் வாடிக்கையாளர்களிடம் பேசி மூலச்சலவை செய்து, அவர்களின் கூட்டாளிகளான ஆனந்த் (எ) விஜய் ஆனந்த், அருண் பிரசாத் ஆகியோருடன் சேர்ந்து இதுவரை சுமார் 6 கிலோ தங்க நகைகளை வாங்கி, அதிக லாபத்திற்கு விற்று எங்கள் நிறுவனத்திற்கு, ₹20 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், குரோம்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் நாஞ்சில்குமார், உதவி ஆய்வாளர் சதிஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி நம்பிக்கை மோசடி செயலில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் (எ) விஜய் ஆனந்த் (38), அருண் பிரசாத் (33), பிரகாஷ் (33) ஆகியோரை சேலம் மாவட்டத்தில் வைத்து நேற்று கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வாடிக்கையாளர்களிடம் நகைகளை பெற்று அதிக விலைக்கு விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gnanasekaran ,33 ,3rd Street, Perungudi, Annai Satya Nagar Extension ,Kalayan Nagar ,Dinakaran ,
× RELATED 3 வயது சிறுவனை குதறிய தெரு நாய்